மதன் பாபுவின் உடல் தற்போது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினரும், உறவினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதன் பாபு பல ஆண்டுகளாகத் திரையுலகில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தி, பல முக்கிய நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது இயல்பான நடிப்பும், தனித்துவமான உரையாடல் விதியும் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.
திரையுலகில் இவர் ஈட்டிய வெற்றி மற்றும் பங்களிப்பு, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. அவரது திடீர் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









