K U M U D A M   N E W S

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.