சரஸ்வதி அலங்காரத்தில் காமாட்சி அம்மன்
நவராத்திரி உற்சவத்தையொட்டி, கோயிலில் அழகிய பொம்மைகளால் கொலு மண்டபம் அமைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் நாள்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
அந்த வகையில், சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு வெள்ளை நிறப் பட்டாடை உடுத்தப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
கிரீடம் தரித்து, கைகளில் சரஸ்வதி வீணையை வைத்திருப்பது போன்ற பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் பல்லாக்கில் நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை காண உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டன.
LIVE 24 X 7









