அதி வேகமாக சென்ற காரை சுமார் 15 கிலோமீட்டர் போலீசார் பின்தொடர்ந்தபோது, கீழபழந்தை பகுதியில் வயல்வெளி பள்ளத்தில் அந்த கார் இறங்கி நின்றுள்ளது. இதனையடுத்து, ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரித்த போது, செய்யாறு அடுத்த ராந்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பதும் அவர் மது அருந்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர், உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்கு செய்யாறு நோக்கி சென்றபோது பூதேரி பள்ளவாக்கம் பகுதியில் ஆடு ஒன்று காரில் அடிபட்டு சிறு காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு ஆட்டின் உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளார். இதனால் பயந்து காரை அதிவேகமாக ஓட்டியதாகவும், தான் குடிபோதையில் உள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என்பதற்காக தடுப்புகளை இடித்து நிற்காமல் சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, காரை குடிபோதையில் அதி வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதித்த செய்யாறு போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். சினிமா பாணியில் போலீசார் காரை துரத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
LIVE 24 X 7









