அப்போது, அவர்கள் செயற்கை பல்லியை குழம்பில் போட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களில் ஒருவர் வெளியே சென்று வாந்தி எடுப்பது போல் நடித்ததாகவும், அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 4 நபர்களும் அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, உணவகத்தின் உரிமையாளர் உமாபதி அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, உணவகத்தில் நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்று உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. மேலும், பிற்பகல் 3 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு நடராஜன் என்பவர் 1:20 மணிக்கே பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்த விபரமும், அதற்குரிய ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் உரிமையாளர் உமாபதி புகார் அளித்துள்ளார்.
இவர் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
LIVE 24 X 7









