”மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடிய ஒரு காவலரே இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டது தண்டனைக்குறியது. அவர் அதிகமாக குடித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் அவர் ஒட்டி வந்த இரு சக்கர வாகன இரு புறமும் வண்டியின் நம்பர் பிளேட் இல்லை. காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்" என பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் தினேஷ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஓட்டேரி போலீசார், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையிலான செயலில் ஈடுபடுதல் சட்டப்பிரிவில் காவலர் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோன்று காவலர் தினேஷ், தன்னைத் தாக்கி ஆபாசமாக பேசி மிரட்டியதாக பெண்ணின் கணவர் மீது கொடுத்தப் புகாரில், ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









