சம்பவம் நடந்தது எப்படி?
வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையிலான போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 5 மற்றும் 6-வது நடைமேடைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த சிலர் ஒரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து, கத்தியால் வெட்ட முயற்சிப்பதைக் கண்டனர். உடனடியாக ரோந்து போலீசார் விரைந்து சென்று, அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தி, 3 பேரையும் கைது செய்து சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள்
காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பின்வரும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. தாக்குதல் நடத்தியவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்ற கார்த்திக் என்பதும், அந்தப் பெண் அவருடைய மனைவி துர்கா என்பதும் தெரியவந்தது. தினகரன் மீது ஏற்கனவே சிஎம்பிடி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தினகரனின் கூட்டாளிகளான மற்ற இருவரும் சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீனா என்ற காக்கா தீனா மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
ரவுடி தீனா குறித்த விவரம்
கைது செய்யப்பட்ட தீனா என்ற காக்கா தீனா, 'பி கேட்டகிரி ரவுடி' ஆவார். இவர் மீது பூக்கடை மற்றும் யானைகவுனி காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், கத்தி மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரவுடி தீனா மற்றும் தினகரன் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் கெல்லீஸ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
LIVE 24 X 7









