இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின், ஆ.ராசா உட்பட நான்கு பேர் மீதும், இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் 2023ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்த ஆ. ராசா, தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரமும், வழக்கின் சில ஆவணங்களும் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்ட நிலையில், ஆ. ராசாவின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், குற்றச்சாட்டுப் பதிவும், விசாரணையும் வரும் 30 தேதிக்கு நடைபெறும் என ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
LIVE 24 X 7









