இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வந்தனா என்னை கேட்காமல் எப்படி என் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தீர்கள் என கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை கட்டியே ஆகவேண்டும் என கூறியதால் வந்தனா பாலிசியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
உடனே அந்த நபர் உங்கள் எச்டிஎஃப்சி கிரிடிட் கார்டு எண்ணை தருமாறும் அப்போது தான் பாலிசியை ரத்து செய்ய முடியும் என கட்டாயப்படுத்தியதால் வந்தனா கிரிடிட் கார்டு எண்ணை தெரிவித்துள்ளார். உடனே வந்தனா தனது வங்கி கணக்கை ஆய்வு செய்த போது 1.65 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து கடந்த 6 ஆம் தேதி திடீரென வந்தனா செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது . அதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 1.65 லட்ச ரூபாய் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வந்தனா உடனே இது குறித்து வங்கிக்கு சென்று விசாரித்த போது அடையாளம் தெரியாத நபர் நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது.. இதனை அடுத்து வந்தனா இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









