பின்னர் 2007ல் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்ட தோனி தன்னுடைய முதல் தொடரிலேயே இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.இந்திய அணியை தோனி, ஒவ்வொரு போட்டியிலும், மிகச்சிறப்பாக வழிநடத்தினார். அதன்பலனாக, 2011-ல் இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது. 2013-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்தன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக என்ற பெருமையுடன் தற்போது வரை தோனி திகழ்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 317 கேட்சுகளும் 122 ஸ்டம்பிங்குகளும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளை பொருத்தவரை, 98 போட்டிகள் விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக கேப்டனாக, பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக பன்முகத்திறமையுடன் சிறப்பாக செயலாற்றி வந்த தோனி, 2020 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனிக்கு ஐசிசி சமீபத்தில், hall of fame விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரது ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









