மனதின் குரல் நிகழ்ச்சியின் 121வது அத்தியாயத்தில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் கொதிப்படையச் செய்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரில் அமைதி திரும்புவது, நம் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும், காஷ்மீரை பயங்கரவாதிகள் மீண்டும் அழிக்கத் துடிப்பதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களின் விரக்தியாகத்தான் இந்த தீவிரவாத தாக்குதல் இருப்பதாக கூறிய அவர், காஷ்மீரை அழிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய சதி இதில் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கடினமான நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என வலியுறுத்தியதுடன், உலக நாடுகளும் 1 புள்ளி 4 பில்லியன் இந்திய மக்களுக்கும் துணை நிற்கும் என உறுதியளித்தார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களும் தன்னை அழைத்து பஹல்காம் தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
LIVE 24 X 7









