சென்னையில் இன்று கார் பந்தயம் தொடங்கியுள்ள நிலையில், ''விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது நமது பொறுப்பு கடமை. ஆனால் சென்னையின் மையமான பகுதியில்தான் கார் பந்தயம் நடத்த வேண்டுமா?'' என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ''ஸ்ரீபெரும்புதூரில் கார்பந்தயம் நடத்துவதற்கான பகுதி உள்ளது. அதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் அங்கு உள்ளன. அங்கு நடத்தாமல் சென்னையில் நடத்துவதால் தங்களுக்கு இடையூறாக உள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்'' என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.