தமிழக ஊடகங்கள் தன்னை இருட்டடிப்பு செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் திரைத்துறையில் நடித்து உயர்ந்த கதாநாயகன் அல்ல, பெரியார், அம்பேத்கர் கொள்கையுடன் 35 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவன் என்றும் அவர் கூறினார்.