தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சென்னையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.