உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதேபோல மாணவப் பருவத்தில் அச்சமின்றி துடுக்குத்தனமாக செய்யும் காரியங்கள் அவர்களின் உயிருக்கே உலை வைப்பதாக அமைந்து விடுகிறது. அப்படித்தான் விதி மீறி இருசக்கரவாகனத்தை இயக்கிச் சென்று விபத்தில் சிக்கி அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள் இந்த மாணவர்கள் மூவரும்.