சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை மூலமும், காணாமல் போன பெண்கள் மற்றும் திருநங்கைகளின் பட்டியலை வைத்தும் அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சடலம் கண்டெடுப்பும் முதற்கட்ட விசாரணையும்
மெரினா கடற்கரை அண்ணா சமாதிக்குப் பின்புறம் உள்ள முகத்துவாரம் மணற்பரப்பில் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கண்டெடுக்கப்பட்ட உடலை அவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் கொலையா? அல்லது டிட்வா மழை நீரில் அடித்து வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் காணும் முயற்சிகள்
கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை மற்றும் கை இல்லாமல் இருப்பதால், தடயவியல் துறையினருடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் சடலத்தின் பகுதிகளை வைத்து அடையாளம் காண முடியுமா என ஆராயப்படுகிறது. மேலும், டிஎன்ஏ பரிசோதனை செய்து அதன் மூலம் அடையாளம் காண போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
காணாமல் போனவர்களின் பட்டியல் ஆய்வு
இந்தச் சடலத்தை அடையாளம் காணும் பணியில், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகத்தின் மூலம் காணாமல் போனவர்களின் அடையாளங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகக் காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்கள் மற்றும் திருநங்கைகள் பட்டியல்களை வைத்து போலீசார் ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.