தமிழ்நாடு

தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் காலமானார்!

By VASUKI
25 May 2025, 07:16 AM
Tamil Nadu Chief Qazi Salahuddin Mohammed Ayub Sahib | தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் காலமானார் | passes away


வயது மூப்பு காரணமாக தலைமை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் நேற்று (84) காலமானார்


தமிழக அரசின் தலைமை காஜி, இஸ்லாமிய அறிஞர் சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் வயது மூப்பு காரணமாக காலமானார். அரபு மொழி இலக்கியத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்ற இவர், எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டமும் பெற்றுள்ளார். அல் இஜாசதுல் ஆலியா என்பது இஸ்லாமிய கல்வியில் மிக உயர்ந்த பட்டங்களில் ஒன்றாகும். இவர், இஸ்லாமிய அறிவிலும் சமூக சேவையிலும் தன்னை அர்ப்பணித்திருந்தார்.

தலைமை காஜியாகப் பணியாற்றுவதற்கு முன் சென்னை கல்லூரியில் அரபு பேராசிரியராக பணியாற்றிய இவர், திருமணங்கள், இஸ்லாமிய சட்ட ஆலோசனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களில் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். சமாதானம், ஒற்றுமை மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் அவர் பெரும் பங்கு வகித்தார்.

தமிழ்நாட்டின் முஸ்லிம் சமூகம், இவ்வளவு உறுதியான மற்றும் இரக்கமுள்ள தலைவரை தங்கள் மத்தியில் கொண்டிருந்தமையால், இவரின் மீதான மதிப்பும் மரியாதையும் மேலோங்கியே இருக்கிறது.

அவரது மறைவு, தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாது, மதங்களைக் கடந்து அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திவான் கவுஸ் ஷர்ஃபுல் முல்க் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அரசு தலைமை காஜியாக 1880ம் ஆண்டு நியமிக்கப்பட்ட உபைதுல்லா நக்ஷ்பந்தியின் வாரிசாகவும் விளங்குகிறார்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.