Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சுதேசி பொருட்களையே வாங்குங்கள்: இந்தியப் பொருளாதாரம் வளரும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

By VASUKI
17 Sep 2025, 03:41 PM
மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறாது, இந்திய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரும் இந்தியத் தயாரிப்புப் பொருட்களையே (சுதேசி) வாங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த முயற்சி, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களின் பணம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், "நாம் அனைவரும் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்லாது. மாறாக, அது உள்நாட்டு முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும்" என்று கூறினார். மேலும், இந்தியப் பொருட்கள் தரம் மற்றும் விலையில் உலக நாடுகளுக்குப் போட்டியாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுதேசி பொருட்களை ஊக்குவிப்பது, உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதோடு, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இது, ’சுயசார்பு இந்தியா’ என்ற அவரது தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ’சுதேசி’ முழக்கம், நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.