Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்வு!

By Christon
30 Sep 2025, 09:54 AM
தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, இன்று (செப். 30, 2025) மேலும் அதிகரித்து ரூ.90 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி ரூ.58,280 ஆக இருந்த 22 கேரட் தங்கம் ஒரு சவரன், தற்போது அபரிமிதமான விலை உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி ரூ.85 ஆயிரத்தைத் தாண்டி முதன்முதலில் வரலாறு காணாத உச்சத்தைப் பதிவு செய்தது.

தொடர்ச்சியான விலையேற்றம்

இதற்கிடையில், நேற்று (செப். 29) தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்தது. காலை நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.85,600-க்கும், ஒரு கிராம் ரூ.10,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் மாலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.86,160-க்கும், ஒரு கிராம் ₹10,770-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய புதிய உச்சம்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும், ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.161-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் ஆகியவையே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.