தமிழ்நாடு

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

By Jayakumar
06 May 2025, 03:44 PM
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
கொலை வழக்கில் சரண்டர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள உதயசூரியபுரம் பகுதியில் மதுரை மாநகர முன்னாள் பாஜக மகளிரணி நிர்வாகி சரண்யா (35). நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் தலையை துண்டித்து கொலை செய்தனர். இது தொடர்பாக வாட்டாத்திகோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி சரண்யாவின் 2வது கணவர் பாலனின் மகனான மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் AD காலனி பகுதியை சேர்ந்த பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் (20) மற்றும் அவரது நண்பர்களான தஞ்சாவூர் கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (20) மற்றும் மேலூர் தனியாமங்கலம் பாரதிநகரை சேர்ந்த குகன்(20) ஆகிய 3 பேரும் மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பாக சரண்டர் ஆகினர்.

பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

இதையடுத்து, வேறு மாவட்டத்தை சேர்ந்த வழக்கு என்பதால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியதால் பின்னர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு மூன்று பேரையும் கொண்டவரப்பட்ட நிலையில் வாட்டாத்திகோட்டை காவல்துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துசென்றனர்.

சரண்யாவின் 2வது கணவர் பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் பாலனின் மகன் கபிலன் தனது நண்பர்களான குகன் ஆகியோருடன் இணைந்து சரண்யாவை தலை வெட்டி தனியாக துண்டித்து கொலை செய்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.