Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது மலர்க்கண்காட்சி!

By VASUKI
23 May 2025, 01:23 PM
தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நாளை 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது தொடங்கி ஒன்பது நாட்கள் வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

மேலும் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் , கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, படகு போட்டி மற்றும் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மேலும் பல்வேறு மலர்களால் உருவ அமைப்புகள் காய்கறிகளை கொண்டு அமைக்கவும் சிற்பங்கள் ஆகியவையும் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற உள்ளது.

அதனை தொடர்ந்து காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் மற்றும் ஸ்டால் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல வண்ண வண்ண மலர்களால் கங்காரு, திண்டுக்கல் பூட்டு, சிறுத்தை ,மயில், பஞ்சவர்ண கிளி, மலபார் அணில், யானை உள்ளிட்ட உருவங்கள் செய்யும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு உருவங்கள் அமைக்க உள்ளது.