திருப்பத்தூரில் பள்ளிக்கு சென்ற சிறுவனை வெறி நாய் துரத்தி கடித்ததில் படுகாயமடைந்தான். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் நாய்களால் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படுவதாக பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.