தமிழ்நாடு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தானாக திறந்து மூடும் பழுதான லிஃப்ட்...கர்ப்பிணிகள் கடும் அவதி

By Jayakumar
09 Jul 2025, 08:35 PM
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

லிஃப்ட் பழுது

இந்த நிலையில் 5 கோடி மதிப்பீட்டில் ஐந்து அடுக்குகளை கொண்ட (சீமாங்) மகப்பேறு கட்டிடம் கட்டப்பட்டது.இதில் இரண்டு லிஃப்ட் அமைக்கப்பட்டது.இதில் ஒரு லிஃப்டில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளை செல்லவும், மற்றொரு லிப்ட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்கள் பயணிக்கும் பயணிக்கும் லிஃப்ட் கடந்த சில மாதங்களாக பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக அந்த லிஃப்ட் பொதுமக்கள் பயணிக்கும் பொழுது தானாக திறக்கவும், அதேபோல தானாக மூடவும் செய்கிறது என நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

இதன் காரணமாக எந்த இடத்தில் பழுதாகி நிற்கமோ? எனவும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இதனை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.