Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - டிடிவி தினகரன் பேச்சு

By VASUKI
02 May 2025, 04:14 PM
தேசிய ஜனநாயக கூட்டணி வலு பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை விரட்ட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எம்.ஜி பார்த்திபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசுகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு முழுமையாக செயல்படுத்தவில்லை எனவும் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

மாணவர்கள் விவசாயிகள் என அனைவரையும் தமிழக அரசு வஞ்சித்தாகவும் அவர் குற்றச்சாட்டினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளற்களை சந்தித்த அவர் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆனது வலுப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமையும் எனவும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சியும் ஒன்று திரட்ட ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பதவியில் இல்லை என்றாலும் தமிழகத்திற்காக போராடும் மனமும் அவர் தெரிவித்தார் மேலும் திருமாவளவன் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு திருமாவளவன் தற்போது எல்லாம் முன்னுக்குப் பின் முரண்பாட தகவல்களை தெரிவித்து வருகிறார்.

மேலும் விஜய் தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுகளை வழங்கினாலும் தொண்டர்களும் அதனை பின்பற்ற வேண்டும் அதிமுக தொண்டர்கள் ஒரு சுற்றறிக்கை விட்டால் போதும் அதை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பது தமிழகத்துக்கே தெரியும் அது போன்று கட்சி தொண்டர்களை விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.