Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கருணாநிதி சொன்னதை பேரவையில் நினைவுகூர்ந்த அமைச்சர் துரைமுருகன்...உற்று கவனித்த முதலமைச்சர்

By Jayakumar
26 Apr 2025, 02:55 PM
மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.
கருணாநிதி சொன்னதை நினைவு கூர்ந்தார்

தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் சுற்றுச்சூழல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர் பதில் அளித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், “சட்டப்பேரவையில் கடந்த நான்காண்டுகளாக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய பிரச்சனைகளின் போதும் அமைதியாக இருந்து அதை கையாண்டது குறித்து பெருமிதத்துடன் பேசினார். இந்தப் பொறுமை கலைஞர் கருணாநிதியிடம் இருந்து வந்தது என்பதை குறிப்பிட்டு பேசினார்.அப்போது, இவை அனைத்தும் கலைஞர் கருணாநிதி மு.க. ஸ்டாலின் குறித்தும், மு.க .அழகிரி குறித்தும் தன்னிடம் சொன்ன கருத்தை பேரவையின் நினைவு கூர்ந்தார்.

உற்று கவனித்த முதலமைச்சர்

அழகிரி படபடன்னு பேசுவார், ஆனால் ஸ்டாலின் அப்படி இல்லை. அமைதியாக (அமுக்குணியாக) இருப்பார் என்று கருணாநிதி சொன்னதை சுட்டிக்காட்டி பேசினார் அமைச்சர் துரைமுருன். அவரது பேச்சை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்று கவனித்தார்.