Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் பெண்.. சாதுர்யமாக செயல்பட்ட மருத்துவர்!

By VASUKI
07 Jul 2025, 07:58 PM
ஜான்சி ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ஹேர் க்ளிப் மற்றும் பாக்கெட் கத்தியை வைத்து பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு குவியும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு மனிதாபிமானம் நிறைந்த சம்பவம், இன்று நாடு முழுவதும் பெருமிதத்தையும் பாராட்டையும் பெற்றுவருகிறது. பிரசவ வேதனையில் துடித்த பெண்ணை காப்பாற்ற, அங்கிருந்த ராணுவ மருத்துவர் ஒருவர் சாதாரணமான பொருட்களை வைத்து செய்த செயல்முறை மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜான்சி ரயில் நிலையத்தில் நேற்று, ஒரு பெண் திடீரென கடும் பிரசவ வலியில் சிக்கிய நிலையில், அருகிலிருந்த ராணுவ மருத்துவர் ஒருவர் மிக்க புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டார். அப்போதைய சூழ்நிலையில் மருத்துவ சாதனங்கள் எதுவும் இல்லாததால், அவர் தனது நுண்ணறிவைப் பயன்படுத்தி ஹேர் க்ளிப் மூலம் தொப்புள் கொடியை இறுக்கி, பாக்கெட் கத்தியை உபயோகித்து வெட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடைமேடையிலேயே நடந்ததுடன், மருத்துவரின் தைரியமும், உடனடி முடிவெடுக்கும் திறனும், அவசர சூழ்நிலையிலும் செயலாற்றும் மனப்பாங்கும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. தற்போது தாயும், புதுப் பிறந்த சேயும் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கதையை ஒரு போராளியின் அறிவாற்றலும், மனித நேயமும் கலந்த உதாரணமாக நாம் பார்க்கலாம். உண்மையான ஹீரோக்கள் வெறும் சினிமாவில் மட்டுமல்ல, நம் நாட்‌களிலும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாக உள்ளது.

சிகிச்சைக்கான கருவிகள் இல்லாத நிலையில், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் க்ளிப்பையும், வெட்டுவதற்கு கத்தியையும் பயன்படுத்தி நடைமேடையிலேயே பிரசவம் பார்த்த நிலையில், தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மக்கள் அவரது சாதுர்யத்திற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.