Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

By VASUKI
08 Jul 2025, 12:14 PM
எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கியது.

கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள மாநிலத்தின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரை ஒதுங்கின. கேரளா மற்றும் தமிழ்நாட்டு கடற்கரைகளில் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் மரத்தடிகள், முந்திரிகொட்டைகள் உள்ளிட்டவை கரை ஒதுங்கின. இந்நிலையில் இந்த கப்பல் விபத்தால் மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி எல்சா கப்பல் விபத்தில் மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக ரூ.9,531 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதை அடுத்து, எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா -II-ஐ சிறைபிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் முந்தைய கப்பல் விபத்துகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. கேரள கடல் பகுதி மீன் வளங்கள் நிறைந்தது. கப்பல் விபத்தினால் மீன்பிடித் தொழிலுக்கும், மீனவர்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது இதையெல்லாம் கருத்தில் கொண்டு கேரள அரசு கப்பலில் இருந்த கொள்கலன்களும் கரையில் கரை ஒதுங்கியுள்ளன. எனவே, தற்போது கரையில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றொரு MSC கப்பலான MSC அகிடேட்டா - II-ஐ சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.