Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

கோடிக்கணக்கில் சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! CEO வெளியிட்ட தகவல்!

By VASUKI
02 May 2025, 09:07 PM
இந்திய யூடியூபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அவர்களுக்காக மேலும், ரூ.850 கோடி ஒதுக்க உள்ளதாகவும் யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
WAVES 2025 உச்சி மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது இதில் கலந்து கொண்ட யூ-டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

"ஒரு படைப்பாளரை, பார்வையாளர்களுடன் இணைக்கும் வேலையையும், கலாச்சார ஏற்றுமதியின் சக்திவாய்ந்த இயந்திரமாகவும் யூடியூப் மாற்றியுள்ளது, மேலும் சில நாடுகள் இந்தியாவைப் போல திறம்படப் பயன்படுத்தியுள்ளன," என்று மோகன் தெரிவித்தார். இந்தியா திரைப்படம் மற்றும் இசைக்கு மட்டும் உலகத் தலைவராக இல்லை, அது 'படைப்பாளர் நாடு' என்று அழைப்பதில் நான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்கள் நிறைந்த நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுபுது வீடியோக்கள் நாளுக்கு நாள் வெளிநாட்டு மக்களை ஈர்க்கிறது. வெளிநாட்டவர்கள் இதுவரை 4500 மணிநேரம் அளவுக்கு இந்திய யூ-டியூப் சேனல் கன்டென்டை பார்த்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய யூ-டியூபர்கள் ரூ.21 ஆயிரம் கோடியை வருமானமாக பெற்றுள்ளனர். அவற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேனல்கள் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய யூ-டியூபர்களின் முன்னேற்றம், அவர்கள் கன்டென்டை உலகளவில் பிரபலப்படுத்த ரூ.850 கோடி ஒதுக்கீடு செய்ய உள்தாக கூறினார்.

இந்தியாவில் 1 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டவர்கள் எண்ணிக்கை 11000 இருந்து 15000 உயரந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை, டிஜிட்டல் துறையில் வளர்ச்சியை உருவாக்கியது மட்டுமில்லாமல்,உலக அளவில் உள்ள அதிக யூடியூப் ஃபாலோவர்ஸ்களை கொண்ட தலைவராக பிரதமர் மோடி தான் உள்ளார் என்றும், அவர் 25 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார் என யூ-டியூப் CEO மோகன் நீல் தெரிவித்துள்ளார்.