இந்தியா

சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு

By Jayakumar
06 May 2025, 05:56 PM
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காயம் அடைந்தால் இலவச சிகிச்சை


மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால், ரூ.1.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும். 7 நாட்கள் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

இலக்கு நிர்ணயிப்பு

வரும் 2030-க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.