இந்தியா

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

By VASUKI
29 Apr 2025, 09:26 PM
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெரும் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல குற்றவியல் மற்றும் பண முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவற்றில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த பண முறைகேடு வழக்கும் ஒன்று. இந்நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

விளையாட்டுகளுக்கான இரண்டு முக்கியமான ஒப்பந்தங்களை வழங்குவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் முறைகேடு செய்ததாக கல்மாடி மற்றும் பிற அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சிபிஐ ஏற்கனவே ஊழல் வழக்கை முடித்துவிட்டதாகக் குறிப்பிட்ட நிலையில், அமலாக்கத் துறை பணமோசடி விசாரணையைத் தொடங்கி அறிக்கையை ஏற்றுக்கொண்டது. விசாரணையின் போது பணமோசடி குற்றம் கண்டறியப்படவில்லை என்ற அமலாக்கத் துறையின் சமர்ப்பிப்பை நீதிபதி கவனித்தார்.

விசாரணைகளின் போது, ​​PMLA இன் பிரிவு 3 இன் கீழ் ஒரு குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதால். ED யின் விவேகமான விசாரணைகள் இருந்தபோதிலும், PMLA இன் பிரிவு 3 இன் கீழ் எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை அல்லது செய்யப்படவில்லை, எனவே, தற்போதைய ECIR ஐத் தொடர எந்த காரணமும் இல்லை, இதன் விளைவாக, ED தாக்கல் செய்த மூடல் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்று நீதிபதி கூறினார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான சிபிஐயின் ஊழல் வழக்கு ஏற்கெனவே முடித்துவைக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் பண முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விசாரணையின்போது கண்டறியப்படவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது. 13 ஆண்டுகால வழக்கின் இறுதி முடிவை தில்லி நீதிமன்றம் உரிய ஆதாரம் இல்லாததால் முடித்துவைத்து உத்தரவிட்டது.