Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: 7 ஆண்டு சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்!

By VASUKI
24 Sep 2025, 07:17 AM
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார வசதியை மேம்படுத்திய மாபெரும் திட்டத்தில், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்தத் திட்டம் பொது சுகாதார வசதியில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனை என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் ஏழை மற்றும் எளிய மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம், கோடிக்கணக்கானோருக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது. இதன் மூலம், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஏழு ஆண்டு நிறைவு, பொது சுகாதாரத் துறையில் இந்தியா அடைந்த மிகப் பெரிய சாதனையாகும். இது உலகிலேயே மிகப் பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயர்தர மருத்துவச் சிகிச்சை, நிதி நெருக்கடி காரணமாக மருத்துவச் சிகிச்சையைத் தவிர்ப்பது என்பது பெருமளவில் குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளது எனவும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில், இந்தத் திட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.