Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

By VASUKI
19 Jul 2025, 02:57 PM
ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.
ஜப்பானில் தற்கொலை முடிவைக் கைவிட வைத்த வளர்ப்பு நாயின் மீது கொண்ட பாசத்தால் தனது நிறுவனத்தை மூடிவிட்டு, ஃபெராரி காரை விற்றுள்ளார் ஹிரோடகா சாய்டோ (54) என்ற நபர் புதிய வாழ்க்கையில் பயணிக்கிறார். இந்தப் பணத்தின் மூலம் ஆதரவற்ற நாய்களைப் பராமரிக்க உள்ளார். ஒரு நாய் தன்னை காப்பாற்றியதால், மற்ற நாய்களைத் தான் காக்க வேண்டும் என இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில், தற்கொலை செய்து கொள்ள விரும்பிய நிலையில் இருந்த சாய்டோவின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு வளர்ப்பு நாய். அந்த நாய் தனது அன்பும் நம்பிக்கையும் காட்டியதன் விளைவாக, தன்னுள் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை உணர்ந்தார் சாய்டோ. “அந்த நாய் எனக்காக உயிரைக் கொடுக்கத் தயார் போல இருந்தது. அது என் உயிரைக் காப்பாற்றியது” என உணர்ச்சி கலந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது தொழில் நிறுவனத்தை மூடினார். கோடிகள் மதிப்புள்ள ஃபெராரி காரை விற்று, அந்தப் பணத்தை ஆதரவற்ற நாய்கள், தெரு நாய்கள் உள்ளிட்டவற்றை காப்பாற்ற, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த முயற்சியின் மூலம், தனது அனுபவம் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்றும், விலங்குகளின் அன்பும் நம்மை மாற்றக்கூடிய சக்தியாக இருப்பதாகவும் சாய்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்குப் பெரும்பாலும் வழங்க முடியாத உண்மை அன்பையும் விசுவாசத்தையும் நாய்கள் வழங்குகின்றன என்பதைத் தனது வாழ்க்கையே எடுத்துக்காட்டாகச் சொல்லிக்காட்டியுள்ளார் ஹிரோடகா சாய்டோ. தற்போது, அவரின் வாழ்க்கை entirely stray dogs welfare-ஐ மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது.