உலகம்

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி!

By Christon
02 Mar 2026, 06:01 PM
மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண போர்ச் சூழல் காரணமாக ஓமன் வளைகுடா பகுதி தற்போது போர்க்களமாக மாறியுள்ளது. இன்று ஓமன் வளைகுடா கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த 'MKD VYOM' என்ற எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா வெடிகுண்டு படகு (Drone Boat) மோதி பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

நடுக்கடலில் நேர்ந்த பயங்கரம்

மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், மஸ்கட் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு உள்ளானது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு ஒன்று அதிவேகமாக வந்து கப்பலின் மீது மோதியது. இந்தத் தாக்கத்தினால் கப்பலின் என்ஜின் அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய மாலுமி உயிரிழப்பு

இந்தக் கொடூரத் தாக்குதலின் போது கப்பலின் என்ஜின் அறையில் பணியில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தகவலை ஓமன் அரசு செய்திக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாலுமியின் பெயர் மற்றும் அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தூதரகம் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.