Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

By VASUKI
20 May 2025, 09:41 AM
இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவு பண்டைய காலத்திலிருந்தே நெருக்கமாக இருந்தாலும், கடந்த வருடம் சில அரசியல் மற்றும் பேச்சு தகராறுகள் காரணமாக இருநாட்டு உறவில் சற்று பதற்றமான நிலை உருவானது. குறிப்பாக, மாலத்தீவில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, இந்திய இராணுவம் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், இந்தியா – மாலத்தீவு உறவுகள் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்நிலையில் மாலத்தீவில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை இந்தியா மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாலத்தீவில் படகு சேவை, போக்குவரத்து, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த இந்தியா 13 திட்டங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில், இருநாடுகளும் சமீபத்தில் நடத்திய பல சுற்றுக் கலந்துரையாடல்களுக்குப் பிறகு உறவுகளை மீண்டும் சீரமைக்க முடிந்தது. இதன் ஒரு முக்கிய முன்னேற்றமாக, மாலத்தீவின் வளர்ச்சிக்காக இந்தியா புதிய திட்டங்களை நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இருநாட்டு நட்புறவை மீண்டும் உறுதி செய்யும் முக்கிய அடையாளமாகவும், மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வகிக்கும் பங்கையும் முன்னிலைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.