அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.அவர்கள் வரலாறு அப்படி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.