விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்தும், கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் ஆகியவற்றை வைத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.