விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகின்ற 23ஆம் தேதி நடத்துவதற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி கட்சித் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதுதொடர்பாக 21 கேள்விகளை காவல்துறை எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அதற்கு இன்று தவெக சார்பில் பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது