ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தியோகர் விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விமானக் கோளாறு காரணமாக பிரதமர் மோடி டெல்லி திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.