திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத் தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.