அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி அமைந்துள்ளது. அப்பகுதியில் பாம்பு, பை, பானை என பல பொருட்களை எடுத்து வந்த பாம்பாட்டி ஒருவர் தனக்கு தெரிந்த வித்தைகளை காட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சற்று நேரத்தில் அங்கு கூட்டம் சேர்ந்துவிட பாம்பை வைத்து தோஷம் கழிப்பதாக கூறி அங்கிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.