வீடியோ ஸ்டோரி

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

By saravanakmr
06 Sep 2024, 12:56 PM
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம் குறித்து பேசிய ராகுல்காந்தி, சத்ரபதி சிவாஜியை பிரதமர் மோடி அவமதித்துள்ளதாக தெரிவித்தார்.  இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சத்ரபதி சிவாஜியிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு மராட்டியரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.