Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நலிந்தோரிடம் நவீன கொள்ளை? மருத்துவமனையின் MONEY HEIST?

By VASUKI
21 Jan 2025, 10:08 AM
உடலுக்கும், மனதுக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடவுளையும் தாண்டி அறிவியலையும், மருத்துவத்தையுமே மனிதர்கள் நம்புகின்றனர். ஆனால், மருத்துவம் என்ற பெயரில் ஏழை மக்களிடம் இருந்து மருத்துவமனை கொள்ளையடிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது நெல்லைக்கே ஜுரம் வர வைத்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் குலவணிகர்புரம் பகுதியில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில், சண்முகத்தாய் என்ற 87 வயது மூதாட்டி காலில் உள்ள ரத்த குழாய்களில் சிறிய அடைப்பு ஏற்பட்டு கால் வலியில் நீண்ட நாட்களாக தவித்து வந்ததால் அவரை இந்த மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளர்.