வீடியோ ஸ்டோரி

காணாமல் போன இளம்பெண்... காவல்நிலையம் சென்ற தந்தை... அங்க தான் செம ட்விஸ்ட்!

By VASUKI
28 Nov 2024, 10:20 AM
இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது தந்தை காவல்நிலையம் செல்ல, அந்த இளம் பெண்ணோ, தனது காதல் கணவருடன் திரும்பி வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பிரியதர்ஷினி, 18 வயதே ஆன பிரியதர்ஷினி, வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிரியதர்ஷினியின் பெற்றோரும், அவரது உறவினர்களும், பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.