வீடியோ ஸ்டோரி

சென்னை அருகே நெருங்கும் கண்டம்..!! ஷாக் ரிப்போர்ட் கொடுத்த Weatherman Update

By leninakathiya
13 Oct 2024, 10:30 PM
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் விலகும் நிலையில், வரும் 15ஆம் தேதி அல்லது 16ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.