பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக பல்வேறு மாவட்டங்களில் வழக்குப்பதியப்பட்டன.