சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கான பயணத்தை தொடங்கினர்.சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் பயணிக்கும் டிராகன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு பூமியை வந்தடைவர் என தகவல் வெளியாகி உள்ளது.