அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் மசூதிகளை இடிப்பதற்கும், மசூதி சொத்துக்களை பறிமுதல் செய்வதை கண்டித்து தமிழகத்தில் 10 மண்டலங்களில் டிசம்பர் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறினார்.