மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றம் நீடித்து வருகிறது.