Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

இறந்தவர் உடலை புதைக்க 21 நாட்கள் போராட்டம்... இந்தியா மதச்சார்பற்ற நாடுதானா?

By VASUKI
07 Feb 2025, 09:57 PM
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிறோம். ஆனால் இறந்துபோன கிறிஸ்தவ மத போதகரின் உடலை 21 நாட்களாக புதைக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் இதற்கு சத்தீஸ்கர் மாநில அரசும், மத்திய அரசும் துணை போவதாக கூறப்படும் சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சத்தீஸ்கர் மாநிலம், சிந்தவாடா கிராமத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் வாய்வழியாக ஒதுக்கப்பட்ட கல்லறைகள் உள்ளன. இந்த கிராமத்தின் கல்லறையில், இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள அடக்கம் செய்வதற்கும், பழங்குடியின மக்களை அடக்கம் செய்வதற்கும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் தனி தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.